Thursday 16 June 2016

அருள்மிகு ஸ்ரீ சப்தகன்னிமார்கள் திருக்கோவில்

அருள்மிகு ஸ்ரீ சப்தகன்னிமார் திருக்கோவில், 
பாரதியார் நகர், சீகம்பட்டி,மணப்பாறை.

பேரன்புடையீர் ,


                             வணக்கம்!  பாரதியார் நகர் காடாகவும்,வயல்வெளியாகவும் இருந்த காலகட்டத்தில், சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு , அப்பகுதியில் சப்த கன்னிமார் தெய்வ அதிர்வலைகள் இருப்பதாக முன்னோர்களால் உணரப்பட்டு, அவ்விடத்தே சப்த கன்னிமார் திருதிருக்கோவில் எழுப்பப்பட்டு,அனைவரும் வணங்கி வந்தனர்.

சப்தகன்னிமார் தெய்வங்கள் , வேண்டுவோர் வேண்டும் வரம் அளித்தும்  , மணமாகாத கன்னிப்பெண்கள் சப்தகன்னியரை வணங்கிவர, அவர்களுக்கு திருமண பாக்கியம் வழங்கியும் அன்றுமுதல் இன்றுவரை  , பக்தர்களை காத்து வருகின்றனர்.

தற்போது உள்ளூர்ப்பெரியவர்கள்,சான்றோர் மற்றும் பொதுமக்களின் ஆலோசனைப்படி திருச்சிமாவட்டம், மணப்பாறை வட்டம் , சீகம்பட்டி கிராமம், பாரதியார் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சப்தகன்னிமார் திருக்கோவில் திருப்பணி , இறையருளால் சீரோடும் சிறப்போடும் நடைபெற உள்ளது. 

திருக்கோவிலில் தற்போது , சப்த கன்னிமார் சன்னதியுடன் , அருள்மிகு வலம்புரி விநாயகர் சன்னதி, அருள்மிகு குமார கணபதி சன்னதியும் அமைந்துள்ளன.

இத்தகைய சிறப்புப்பெற்ற திருக்கோவிலில் , திருக்கோபுரம் எஸ்த்துப்பவும், அருள்மிகு முருகன்,அருள்மிகு தெட்சிணாமூர்த்தி மற்றும் நவக்கிரக திருவுருவப்பிரதிஷ்டை செய்து , திருக்கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளதால், பக்தகோடிகளும், மெய்யன்பர்களும் தங்களால் இயன்ற பொருள் உதவி,நிதி உதவி மற்றும் ஆன்மீக ஆலோசனைகள் வழங்கி , அருள்மிகு ஸ்ரீ சப்தகன்னிமார் திருக்கோவில் கும்பாபிஷேகம் சீரியவண்ணம் நடந்தேற, ஒத்துழைப்பு நல்கிட இறையருளை தியானித்து , வேண்டுகிறோம்.


இங்ஙனம் ,

ஸ்ரீ சப்தகன்னிமார் திருக்கோவில் அறங்காவலர் 
மற்றும் திருப்பணிக்குழு, பொதுமக்கள்.
பாரதியார் நகர்,மணப்பாறை.